Monday 8 March 2021

மாவைக் கந்தன் பதிகம்

 மன்னுந் திருமாவை வாழ்வுகந்த கந்தனடி

உன்னி ஒருபதிகம் யானோத-மின்னுமணிப்

பையரவஞ் சூடுசடைப் பண்ணவன்முற் றந்தவைந்து

கையனடித் தாமரையே காப்பு.


தேவரர்சிர மீதுதன தீரடிகள் சூடிமிகு

     சீர்புகழ வார்வமுடனே

சேவைபுரி வோர்கள்சுர தாதியர்க ணேசமொடு

     தேனினிசை பாடியினிதாய்

மேவிநட மாடவது நாடிமகிழ் வோடுறையு

     மேலமரர் கோமகளெனும்

மேதகுதெய் வானையோடு மானுதவு மேர்கொளிள

     வேடர்மக டானுமுறவாய்

ஆவியென மேவியிரு பாலுமுனை நாடிமகிழ்

     வாயமர ஞானவடிவே 

லாயுதமின் வீசியுன தோர்கரம தாகவுற

     வாடுமயின் மீதுவருவாய்

மாவலிய மேதிமிசை பாசமுட னாடியெமை

     மாமறலி யோடிவருநாள்

மாகமுகு வாழைபல வானளவி யேநிறையு

     மாவைநகர் வாழ்முருகனே.  1


ஆறுதலை வேயுமிறை சூரனெனு மாவவுண

    னாதியரி னாறுயலிழந் 

தாறுதலை நாடிவரு மான்முதல வானவர்க

     ளாறுதலை மேவுதலுற

ஆறுதலை மேவிமுக மாறினடு வாநயன

     மாறினுறு மாறுபொறிதந் 

தாறுகுண மாறுமுக மாகவிழி தோள்செவியி

     ராறுகொள வேயருள்செய

ஆறனைய ராதரவி னோடுபய மீயவுமை

     வாயுமிக வாதரமுற

ஆறுவன மாயமுறை யோதுநரை யாளுமிறை

     யாகிவல சூரன்முதலா

மாறுபடு வோரழிய வேலைவிடு வாயெமது

     மாதுயரு மோயவருள்வாய்

மாகமுகு வாழைபல வானளவி யேநிறையு

     மாவைநகர் வாழ்முருகனே.  2