Sunday, 28 February 2021

சந்நிதிக் கந்தர் சதகம் 61-70

வேளைப் பொடிசெய் விழியா லருள்செவ்

வேளைப் பணியின் விதிதேய் வுறவாழ்

நாளைக் குறுகான் நமனும் நமதுட்

கோளைக் கொடுமெய்ந் நெறிகூ டுறுமே.  61 


உறுமா தவர்வந் துறைசந் நிதியைக்

குறுகக் குறுகக் கொடுநோய் வினைகள்

குறுகக் குறுகும் மகிழ்வுங் குணமும்

வறுமைப் பிணியும் மயலுங் கெடுமே.  62


கெடலற் றொலியாற் கிளர்வுற் றலைமா

கடலிற் றிரைபோற் கடுகும் வினையால்

உடலுற் றலைவேற் குளகன் மமெலாம்

விடவெற் பெறிவேல் விடுசற் குருவே.  63


குருவாய் மருவிக் கொடுமா ணவமோய்

தருமா றுகடைக் கணைநீ தருவாய்

மருவார் புரமூன் றடுசே வகனார்

தருபா லகனே சமரா திபனே.  64


அதிபன் அமரர்க் கதிமா யையினர்

திதிபுத் திரரின் திறல்கொல் விறலான்

கதியற் றவரின் கதிசந் நிதியில்

வதிநம் பதிசண் முகசெம் மணியே.  65


மணிமந் திரஔ டதமாய் மனமெய்ப்

பிணிகொன் றடியார்க் கருளும் பெருமான்

தணிவின் றலையோ சைதவர் துதியுள்

விணிலொன் றிடுசந் நிதிமே விடனே.  66


இடனில் பருவத் திலுமுன் னமிடுங்

கடனார் பயில்சந் நிதியைக் கருதா

மடவா ரெனினும் ஒருநாள் வரினும் 

திடமாய் அருள்வன் திருவே ரகனே.  67


திருவே ரகஞ்செந் திபரங் கிரியே

உருவா வினன்கு டிபழம் முதிர்கா

திருமால் வரைக திரைசந் நிதிவாழ்

தருகுஞ் சரிகா தலதா சரணே.  68


சரணென் றமரர் தலைவன் பணிய

வரனொன் றியசூர் மயில்சே வலெனும்

உருவொன் றவுடம் பிடியா லுடல்போழ்

உரனொன் றியசேய் அடியா ருறவே.  69


உறவாய் அயலாய் உடனாய் உறுநின்

திறனார் அறிவார் திருமா மறையின்

அறனாய் அறனுக் குமகப் படலில்

பிறவா முதலே குககா பெரிதே.  70


Wednesday, 24 February 2021

சந்நிதிக் கந்தர் சதகம் 51-60

 முதலாய் நடுவாய் முடிவாய் முழுதாய்

நிதமாய் ஒளிரும் ஒளிசந் நிதியில்

பதபங் கயமெய் யடியார் பரவ

உதயம் புரியும் உருவொன் றிடவே.  51


ஒன்றும் முடலும் மிகையென் றுனையே

நின்றும் இருந்துங் கிடந்தும் நினைவார்

துன்றும் பவநோய் துடைதே சிகனே

என்றுன் னருளென் றெணிவா டுவனே.  52


வாடும் பயிர்வான் மழைநா டிடல்போல்

நீடும் புவியில் நினைநோக் குவனான்

ஆடும் மயின்மே லழகா இனிநாள்

நீடும் படிநீ விடில்நிற் கழகே.  53


அழகன் பிளமை அறிஞா னமருள்

பழகன் பினருக் கருள்செய் பவனாய்ப்

பழமொன் றுபெறப் பலபா டடையும்

குழகன் குளிசந் நிதிகூ டிடுமே.  54


கூடும் உடலின் பசியும் குலையா

வாடும் மனதின் பசியும் வளரா

நீடும் உயிரின் பசியும் நிலையா

தோடும் படிசந் நிதியாய் உதவே.  55


உதவா அசுரர்க் கொருபன் னிருகை

பதநா டமரர்க் கிருதாள் பரியா

நிதமா றுமுகன் நெடுமா கடல்சேர்

இதசந் நிதிவாழ்ந் திறைசெய் திடுமே.  56


இடவென் றருளும் பொருள்கொண் டிசைசீ

ருடனன் றறமும் பெறுமா றுதவா

துடல்விண் டழிவா ருறுதிண் ணிருளார்

இடனொன் றலிலா தெடுசேய் எனையே.  57


எனையே யறியான் எனிலெங் குநிறை 

நினைநா னறிமா றிலையே நெடிதாய்

நினைவே னினைவில் நினருள் வடிவாய்

எனையாள் குகவந் திருவின் புறவே.  58


உறுநட் புபகை எனவே றுணரும்

மறுகற் றொருமை உணர்வே மருவப்

பெறுதற் கருள்செய் பிறைபாம் பருகே

உறுபொற் சடையா னுதவொள் ளொளியே. 59


ஒளியார் மனதுக் கொளியாய் ஒளிர்வான்

ஒளியா மனதுக் கொளியா தொழிவான்

அளிபா டிசைகொண் டலர்தேன் மலரா

அளிகா வுறுசந் நிதிவே ளவனே.  60

Sunday, 21 February 2021

சந்நிதிக் கந்தர் சதகம் 41-50

 வெளிகால் தீநீர் நிலனாய் மிளிர்வான்

தளிகொண் டேசந் நிதியில் தழையும்

ஒளியாய் அன்பா லுருகும் அடியார்க்

கெளியா னாகி வெளிவந் திடுமே.  41


வந்தே யருள்வாய் மயின்மே லமர்வாய்

கந்தா எனவிண் ணவர்கள் கதறப்

பந்தத் தவரப்பகவர்க் கருளான்

நந்தற் புறுமண் ணவர்பால் நணுமே.  42


நண்ணிச் சிறியோ னாய்நா வலிலே

உண்ணக் கனிகள் ஔவைக் குதவிக்

கண்ணுக் கினிதாம் காண்பீந் தவனெம்

வண்ணச் சிறையார் மஞ்ஞைப் பரனே.  43


பரனரு ளறுமுக சரவண பவகுக

பிரணவ கணபதி பினருறு பெரியவ

சுரபதி வனபதி திதிதரு மருமக

வரமளி வழிபட நினதடி மலரே.  44


மலரும் புவனம் முழுதும் வடிவாய்

நிலவும் உயிராய் நிறைசண் முகனே

அலரும் கிருபா கரனே யருள்வாய்

மலகன் மமெலாம் மருவா வகையே.  45


வகையார் அவலக் கடலின் மருவும்

தொகையார் சுழியிற் சுழலும் தொடர்பைத்

தகையார் பதமீந் தருளித் தகையாய்

குகையார் கவுஞ்சங் குடைவே லவனே.  46


வேலா மயிலா முருகா விமலா

காலா யுதகே தனனே கவுரி

பாலா குழகா பரசந் நிதியாய்

மாலா லழியா மையெனக் கருளே.  47


அருளிக் குமர குருப ரனையாண்

டிருளைப் பொடிசெய் தெழுசெஞ் சுடரே

குருளைக் கருள்செய் குழகன் குமரா

மருளற் றிடவெற் கருள்கண் மணியே.  48


மணிகண் டனருள் மதலாய் புலவர்

துணிவொன் றவுரை நயமாய் சுரனே

பணிவென் றனையும் படரும் விதிகொன்

றணிகொண் மயிலாய் அணையென் உளமே.


உளமோ கணமா கிலுமோய் கிலதாய்க்

குளகுக் கலையா டெனவே குலைய

அளவா இடர்வாய் அமிழ்வேற் கருளித்

தளரா வகைகா தனிவேல் முதலே.  50



Saturday, 20 February 2021

சந்நிதிக் கந்தர் சதகம் 31-40

 பரமும் உளதென் பதுதேர் கில்லா

திரவும் பகலும் இகமே நாடும்

நரர்போ லழியா வகைநீ நல்காய்

வரசந் நிதியில் வதிசெவ் வேளே.  31


வேளைப் பரவி மிளிர்சந் நிதியில்

தாளைத் தலையில் தரியா தவர்வாழ்

நாளைப் புவியில் நரகத் தினிலே

பீழைப் படுமா பெரிதுய்ப் பவரே.  32


உய்க்கும் வினைவந் துறநா னுழல்வேன்

எய்க்கும் படியா இனியும் விடினீ

பொய்க்கும் உடலப் பொறைகொண் டடியேன்

உய்க்கேன் எனையாள் உமைபா லகனே.  33


பாலப் பருவத் தவனென் பதுனிச்

சாலப் பழிசூர் தனையும் அருளும்

வேலப் பனெமை விடுவா னலனீ

மாலற் றலையா திருவென் மனனே.  34


மனத்தா னினைத்தால் வனத்தா ளளிப்பான்

வனத்தான் அனத்தான் தனைத்தாழ் வரத்தான்

சினக்கா லனைத்தா னுதைத்தாள் திருத்தா

ளெனத்தா வெனத்தான் தனைத்தாழ் குகத்தே.


தேவா வாநா னோவா தேகா

மாவா னானா மாயா மாசூ

ராவா னோயா வீமா றாவே

லேவா மாலா னோநீ யேறே.  36


ஏறக் கரமுச் சியினா விசையோ

டாறக் கரமும் அமைவாய் நவில

வேறற் றிருதாள் நினைவார் விழையும்

பேறத் தனையும் பெறல்நிச் சயமே.  37


சயமா மயிலில் தகைமா திருவர்

தயவா யருகே யமரத் தனிவேல்

துயகை யொளிரத் தொழுசந் நிதியாய்

அயர்வற் றிடவந் தணையென் னகமே.  38


அகமெய் யதனால் அறின்மா சறுமா

முகனின் றருள்வன் அதனில் முகமும்

மிகநன் றலரும் மிடிநோ  யகலும்

இகமும் பரமும் சுகமெய் திடுமே.  39


எய்துஞ் சுகமென் றெணிமா தவர்வந்

தெய்துந் தலமே ரிசைசந் நிதியங்

குய்யும் படிதன் னடியார் ஒளிர்வேற்

செய்யன் மயில்மேல் வெளிவந் திடுமே.  40


Friday, 19 February 2021

சந்நிதிக் கந்தர் சதகம் 21-30

 ஏற்றே யருண கிரியார் இசைபா

மாற்றாய் அருளை மகிழ்வாய் அருள்வாய்

தேற்றேம் துதியும் சிறிதென் றிகழா

தேற்பாய் இளையாய் இதுநின் னியல்பே.  21


இயலைத் தமிழுக் கிசைசெய் முனிவன்

அயர்வற் றிடமுற் குருவாய் அருளும்

சயமுற் றியபன் னிருகைத் தலனெம்

மயலற் றிடவுள் ளமதுற் றிடுமே.  22


உறுதீ வினைபேய் உடனோய் பகைமா

சறுமே அலைவந் தலைசந் நிதிவாழ்

அறுமா முகவன் அடியைப் பரவிற்

பெறுபே றுகளும் பெருகும் பெரிதே.  23


பெரிதா மலையிற் பிறழ்பஞ் சருகே

எரிதீப் பொறியொன் றெதிரின் நொடியில்

தெரியா தழியும் திகழா றெழுத்தி

னெரியா வொழியும் எமதொல் வினையே.  24


வினையே னெனினும் விழைவாய் உனைநான்

நினைவே னெனையும் நினைநீ நெடிதாய்

கனைமா கடல்வந் தணைசந் நிதியிற்

புனைமா மயிலிற் பொலிசெஞ் சுடரே.  25


சுடராய் அகமும் புறமும் சுடரும்

அடல்வே லிறைவன் அமரர்க் கரியான்

திடமா யுறைசந் நிதிசென் றடையின்

உடனே உடலுள் உயிர்நோய் கெடுமே.  26


கெடுமென் றுடலங் கிடைபோ தறனா

டிடுவார் நிதமும் இயல்சந் நிதியில்

நெடுவே லிறைவன் இருதாள் நினைவே

அடுமெம் மதமென் றறிவாய் அகமே.  27


அகமென் மலரன் றதுகல் அதனை

நெகவென் றருளி நிலைநின் றிடுவாய்

குகவன் றிசையாக் குறவர் கொடியின்

அகமொன் றிடவென் றலைவாய் மலையே.  28


மலைவே டுவர்கள் மதுவூன் மிசைவார்

கொலையார் அவர்கொள் குரவைக் கலைவாய்

இலைவே லிறைவா எதுநன் றறியா

நிலையே மையுங்காத் திடுவாய் நிதமே.  29


நிதமன் றுணடம் புரியும் நிமலன்

சுசசெந் தமிழின் சுவைதேர் புலவ

சதமென் றுனையே நினைவார் தமையும்

இதமீந் தருள்வாய் இகமே பரமே.  30

Thursday, 18 February 2021

சந்நிதிக் கந்தர் சதகம் :11-20

போநன் னெறியிற் புகுதா தவமே

ஈனம் புரிவார் இடநா னடையா

தாநந் தமயம் அடைதற் கிடமா

ஞானம் தருவாய் நமையாள் முருகே.  11


முருகார் கமலத் தமர்நான் முகனைப்

பெருமா லகலச் சிறைசெய் பெருமான்

குருகார் தருசந் நிதியிற் குமரன்

இருதாள் அடியர்க் கிருமா நிதியே.   12


நிதியைக் கருதி நிலைநீ தியினை

மதியார் மனதில் மருவா முருகன்

கதியே துமிலா ரெனினும் கரவா

மதியார் மனதில் மகிழ்வாய் மனுமே.  13


மன்னும் அறமும் பொருளும் மகிழ்வும்

துன்னும் படியெற் கருள்செய் சுரரும்

இன்னல் களைதற் கிடமா யணுகும்

நன்னர் தருசந் நிதிநம் பதியே.  14


பதியென் றொன்றில் லாதார் பயில்சந்

நிதியன் றன்பொன் னீடா ணினையிற்

கதிவந் தொன்றக் காரா கடவி

குதி கொண் டெம்மைக் கூடா னிசமே.  15


நிசமா றுமுகன் நெடுமா மறையை

அசபா சுவரம் புரிவோ ரடைவார்

கசமே டமயில் களைவா கனமேல்

புசமா றிருபொற் பொறையான் தயவே.  16


தயவா யொருசொல் தருவாய் குருவாய்

உயநா மெனநின் னடியார் உருகா

அயர்வா ரவரை விடுவா யலையே

கயவாய்க் கருள்சங் கரனார் மகனே.  17


மகனோ சிவனோ மருவோ மலரோ

அகமோ புறமோ அருவோ உருவோ

இகமோ பரமோ இருளோ ஒளியோ

குகனே நினைநாம் கொளுமா றெதுவே.  18


எதுவென் றுணரக் கரியாய் எனினும்

மதுவொன் றுவையன் புறுவார் மனதில்

மெதுவென் றுதவழ் சிறுகால் வெயிலை

விதுவென் றுசெய்சந் நிதிவேல் விறலே.  19


விறல்சேர் சூரன் மிகுமா யையினான்

அறமார் தேவர்க் கருநோய் புரிவான்

இறவே லேவும் இளையோன் அடியார்

உறவாய் ஞான ஒளியேற் றிடுமே.  20